ஆப்நகரம்

இறக்குமதி வரி உயர்வு.. சீனாவுக்கு செக்.. இந்தியாவின் புதிய பிளான்!

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்க அரசு திட்டம்.

Samayam Tamil 12 Aug 2022, 12:32 pm
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். இதனால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு உதவி கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
Samayam Tamil import duty


இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வந்தாலும், இறக்குமதியும் உயர்ந்துகொண்டேதான் போகிறது. இதனால், வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகளவில் உள்ளது. எனவே, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

ஆத்மநிர்பார் திட்டத்தின் இலக்குகளை தொடவும், உள்நாட்டிலேயே உற்பத்தியை ஊக்குவிக்கவும் இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. எனினும், ஒவ்வொரு பொருளுக்கும் கவனமாக ஆய்வு செய்தபிறகே இறக்குமதி வரி உயர்த்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.

வருமான வரி செலுத்துவோருக்கு தடை.. புதிய ரூல்ஸ் என்ன சொல்கிறது?
சீனாவில் இருந்து ஏராளமான பொருட்கள் இந்திய மார்க்கெட்டில் குவிந்து வருகின்றன. சீனாவில் இருந்து குவியும் இறக்குமதியை குறைக்கவும் இறக்குமதி வரி விதிக்க அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த சில தினங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும் உரம் விலையும் குறைந்துகொண்டே வருகிறது. ஏற்கெனவே தங்கம் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு கணக்கும் குறைந்துவிடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்