ஆப்நகரம்

5 கோடிப் பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Dec 2019, 5:30 pm
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil government plans to create 5 crore jobs says nitin gadkari
5 கோடிப் பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம்!


பொருளாதார மந்தநிலையும் வேலையின்மைப் பிரச்சினையும்!

2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசின் மீது உள்ள மிகப் பெரிய குற்றச்சாட்டே போதிய அளவில் நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதுதான். அதோடு, பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்கள் வீசப்பட்டு வருகின்றன. பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


எல்லாம் சரியாகிவிடும்: ஆறுதல் கூறும் மத்திய அரசு!

நிதின் கட்கரி நம்பிக்கை!

டெல்லியில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஆஜ் தக் 2019 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதின் கட்கரி பேசுகையில், “இந்தியாவில் தற்போது சவாலான சூழல் நிலவுவது உண்மைதான். ஆனால் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ள இந்தியா, விரைவில் அதிலிருந்து மீண்டு வரும். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், உள்கட்டுமான வசதிகளைச் சிறப்பாகவும், கிராமப்புற வேளாண் தொழிலை வளர்க்கவும் வேலை உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 5 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்” என்றார்.


உள்நாட்டில் இருக்கு... வெளிநாட்டு போன் எதற்கு? குறையும் இறக்குமதி!!

சிறு நிறுவனங்களுக்கு அரசின் ஆதரவு!

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி குறித்தும் நிதின் கட்கரி இந்நிகழ்ச்சியில் பேசினார். நாட்டின் வளர்ச்சியில் 29 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ள சிறு நிறுவனங்கள் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன; நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அனைத்துத் துறைகளிலும் அரசு கவனம் செலுத்தியாக வேண்டும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார். சாலைப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.17 லட்சம் கோடி வரையில் செலவிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.


வெங்காயத்துடன் கூட்டுச் சேர்ந்த தக்காளி, உருளை... விலை உயரும் காய்கறிகள்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்