ஆப்நகரம்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்... குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு!

காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2021, 3:44 pm
நடப்பு நிதியாண்டின் காரிஃப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஜூன் 9ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இக்கூட்டத்தில் நெல் உள்ளிட்ட அனைத்து காரிஃப் பயிர்களுக்கும் உண்டான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil MSP


காரிஃப் பயிர்களிலேயே அதிகபட்சமான எள்ளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த ஆண்டை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.452 அதிகமாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துவரை மற்றும் உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.300 அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, நிலக்கடலைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.275 அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வகை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக, வெவ்வேறான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ரூ.500, ரூ.1000 நோட்டு... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
நெல் பயிரைப் பொறுத்தவரையில், பொதுவான ரகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,868 ரூபாயிலிருந்து 1,940 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, முதல் ரக நெல்லின் ஆதரவு விலை ரூ.1,960 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சோளம், ராகி, பாசிப்பயறு, சோயா பீன்ஸ், சூரியகாந்தி விதை, பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் ஆதரவு விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்