ஆப்நகரம்

தனியாரிடம் செல்லும் அரசு வங்கிகள்... தள்ளிப் போகும் திட்டம்!

இரண்டு பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

Samayam Tamil 2 Aug 2021, 9:50 pm
நீண்ட காலமாகவே வாராக் கடன் பிரச்சினைகளாலும் போதிய மூலதனம் இல்லாமலும் இந்திய வங்கிகள் தவித்து வருகின்றன. இதனால் வங்கித் துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் நலிந்த பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது. இதன்படி, பத்து பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டது. யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 வங்கிகள் நான்கு வங்கிகளாக இணைக்கப்பட்டன.
Samayam Tamil bank


பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க முடிவுசெய்துள்ள மத்திய அரசு, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கிகளில் பாதி அளவைத் தனியார் மயமாக்க முடிவுசெய்துள்ளது. தற்போதைய நிலையில் 12 பொதுத் துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அதில் பாதிக்கு மேல் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வங்கித் துறையில் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார்மயக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் இரண்டு வங்கிகள் முதலில் தனியார் மயமாக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

வேலைவாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் நிறுவனங்கள்!
இந்நிலையில், கொரோனா போன்ற பிரச்சினைகளால் பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் கொள்கைக்கு ஒப்புதல் தருவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் பணி அடுத்த ஆண்டில் நடைபெறும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகள் 7 பெரிய வங்கிகளாக உருவாக்கப்பட்டு, தேசிய அளவில் 8 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்