ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

விடுமுறை பயண சலுகை திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 25 Oct 2020, 3:49 pm

விடுமுறை பயண சலுகை திட்டத்தின் (LTC cash voucher scheme) பயன்களை பெற மத்திய அரசு ஊழியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பில்களை சமர்ப்பிக்கலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Money


இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், விடுமுறை பயண சலுகை திட்டத்தின் கீழ் கேஷ் வவுச்சர் பெற ஒன்றுக்கும் மேற்பட்ட பில்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போனஸ் வந்துவிட்டதா? இதைச் செய்தால் நல்ல லாபம்!

மத்திய அரசு அக்டோபர் 12ஆம் தேதியன்று விடுமுறை பயண சலுகை கேஷ் வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதுவரை, பயணத்திற்காக மட்டுமே விடுமுறை பயண சலுகை திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் பயன்பெற்று வந்தனர்.

ஆனால் இப்போது இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் 12 விழுக்காடு ஜிஎஸ்டி வரி அல்லது கூடுதல் வரி விதிக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கிக்கொண்டு பயன்பெறலாம்.

விடுமுறை பணமாக்கல் இல்லாமல், உரிய விடுமுறை பயண சலுகை கட்டணத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் பயன்பெறலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டணத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதத்துக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டுமெனவும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

2018-21ஆம் தொகுதி ஆண்டுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் விடுமுறை பயணச் சலுகை கட்டணத்தின் மீதத் தொகைக்கு இத்திட்டம் பொருந்தும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பித்து கிளைம் செய்திருக்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்