ஆப்நகரம்

வேண்டும் வேண்டும்.. பழைய பென்சன் திட்டம் வேண்டும்.. பூகம்பமாக வெடிக்கும் போராட்டம்!

தொடர்ந்து ஆறாவது நாளாகப் போராட்டம்!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 19 Mar 2023, 9:03 am
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து ஆறாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil govt employees protesting for the sixth consecutive day demanding the implementation of old pension scheme
வேண்டும் வேண்டும்.. பழைய பென்சன் திட்டம் வேண்டும்.. பூகம்பமாக வெடிக்கும் போராட்டம்!


​பழைய பென்சன் திட்டம்!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சினைகளுக்கு மத்தியில் சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

​சிலருக்கு மட்டும் வாய்ப்பு!

பல மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்ட சில மத்திய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை தேர்வு செய்ய மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. அதே நேரத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோரி, மகாராஷ்டிர அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது.

வேலை நிறுத்தப் போராட்டம்!

இந்த விஷயத்தில் அரசு எந்த முடிவும் எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என ஊழியர் சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வேளாண்மைத் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தால், மாநிலத்தில் பருவமழைக்கு பின், பயிர்கள் சேதம் குறித்து மதிப்பிடும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் நர்சிங் ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட லட்சக்கணக்கான ஊழியர்கள் மார்ச் 14 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிலைமை மோசமாகும்!​

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 36 அமைப்புகளின் குழுவின் பிரதிநிதியான விஸ்வாஸ் கட்கர் கூறுகையில், ” இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை அரசு எடுக்காவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை பாதிப்பு!

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பருவமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெற்ற ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

5 மாநிலங்களில் வந்தாச்சு!

தற்போது 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகியவை அடங்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் ராஜஸ்தான். அதே நேரத்தில், சமீபத்தில் இமாச்சல பிரதேச அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்