ஆப்நகரம்

டிரைவிங் லைசன்ஸ் காலாவதி ஆகிவிட்டதா? கவலை வேண்டாம்!

பிப்ரவரி 1ஆம் தேதியுடன் காலாவதியான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடி காலம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jun 2020, 6:38 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், அவசரக்கால வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் இருந்ததால் தங்களது ஓட்டுநர் உரிமம் வாகனப் பதிவு உள்ளிட்ட ஆவணங்களைப் புதுப்பிப்பது இயலாமல் போனது. இதைக் கருத்தில் கொண்டு மேற்கூறிய ஆவணங்களுக்கான செல்லுபடி காலம் ஏற்கெனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு காலம் மேலும் நீடிப்பதால் ஆவணங்களுக்கான செல்லுபடி காலம் செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil documents


இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989 ஆகியவற்றின் கீழ் பொதுமக்கள் தங்களது வாகனங்களின் ஃபிட்னஸ் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் தொடர்பான பல்வேறு வகையான ஆவணங்கள் 2020 பிப்ரவரி 10 முதல் 2020 ஜூன் 30க்கு இடைப்பட்ட காலத்தில் காலாவதியாகும் சூழல் இருந்தால் அவை வருகிற செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் ஓட்டுநர்களும், பொதுமக்களும் பிரச்சினையின்றித் தங்களது வாகனங்களை இயக்கலாம்.


பார்லே ஜி பிஸ்கட்: 82 ஆண்டுகளில் மாபெரும் சாதனை!

சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலிலும் பொதுமக்கள், ஓட்டுநர்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவை அத்தியாவசிய தேவைகளுக்காகத் தடையின்றி செயல்பட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்