ஆப்நகரம்

ஆதார் - ரேஷன் கார்டு இணைப்பு: மத்திய அரசின் அறிவிப்பு!

ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 May 2020, 1:23 pm
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாட்டு மக்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ என்ற அளவில் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது கொரோனா பீதியால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், மூன்று மாதங்களுக்குக் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருகிறது மத்திய அரசு.
Samayam Tamil aadhaar


இந்நிலையில் ஏழை மற்றும் புலம்பெயர்ந்த பயனாளிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. நாட்டிலுள்ள அனைவரும் தங்களது ரேஷன் கார்டுகளைத் தங்களது ஆதார் எண்களுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆதார் - ரேஷன் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஊக்கத் தொகை... குஷியில் பங்குச் சந்தை!

இதுகுறித்து, மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது விநியோக முறையில் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படமாட்டாது எனவும், ஆதார் இல்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் பெயர் நீக்கம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரச் சலுகைகள் என்னென்ன? நிர்மலா செய்தியாளர் சந்திப்பு... 4 மணிக்கு ரெடியா இருங்க!

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் யாருக்கும் ஆதார் இணைப்பைக் காரணம் காட்டி உணவு தானியங்களை வழங்க மறுப்புத் தெரிவிக்கக்கூடாது எனவும், அவர்களின் பெயர்களை ரேஷன் கார்டுகளிலிருந்து நீக்கக் கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்