ஆப்நகரம்

அவசரகாலக் கடன்: மேலும் 27 துறைகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் அவசரகாலக் கடன் திட்டம் சுகாதாரம் உள்ளிட்ட மேலும் 27 துறைகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Nov 2020, 5:55 pm
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், கோடிக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அத்துறையை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து அவசரகாலக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு குறு தொழில்முனைவோர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள், தனி நபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அளவான கடன் கொண்ட கூட்டு நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் போன்றோர் கடன் வாங்கலாம் என்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டது.
Samayam Tamil loan


சிறு குறு தொழில்முனைவோர்கள் அதிகபட்சமாக ஏற்கெனவே வாங்கி இருக்கும் கடன் நிலுவைத் தொகையில் 20 சதவீதம் வரை அல்லது 25 கோடி ரூபாய் வரை சிறு குறு நிறுவனங்கள் இத்திட்டத்தில் கடன் வாங்கலாம். இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் உரிமையாளர்களும் கடன் பெறலாம் என்று மத்திய அரசு பின்னர் அறிவித்தது. கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதாவது, சிறு குறு நிறுவனங்களுக்கான இந்த அவசரகாலக் கடன் திட்டம் நவம்பர் 30 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மாதம் ரூ.10,000 பென்சன் வாங்க சூப்பரான திட்டம்!

இந்நிலையில், இந்த அவசரகாலக் கடன் திட்டம் மேலும் 27 துறைகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. கமாத் குழுவின் பரிந்துரைப்படி, ரியல் எஸ்டேட், ஜவுளி, கட்டுமானம், மருந்து, சுகாதாரம், லாஜிஸ்டிக்ஸ், சிமெண்ட், ஆட்டோ பாகங்கள், ரெஸ்டாரண்ட், சுற்றுலா, ஹோட்டல், மின்சாரம் உள்ளிட்ட 27 துறைகளுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி நிலவரப்படி, இந்த அவசரகாலக் கடன் திட்டத்தின் கீழ் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இணைந்து 61 லட்சம் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.2.05 லட்சம் கோடியைக் கடனாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளன. அதில் ரூ.1.52 லட்சம் கோடி வழங்கப்பட்டுவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்