ஆப்நகரம்

அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக் காலத்தை மத்திய அரசு மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்துள்ளது.

PTI 1 Oct 2016, 5:08 pm
புதுதில்லி: பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக் காலத்தை மத்திய அரசு மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்துள்ளது.
Samayam Tamil govt extends sbi chief arundhati bhattacharyas tenure by one year sources
அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு


இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் சவுத்ரி கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியன்று ஓய்வு பெற்றார். அதன்பின்னர், அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டார். 200 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை வழங்கி வரும் ஸ்டேட் வங்கியின் தலைவராக பெண் ஒருவர் பதவியேற்றது அதுவே முதல் முறையாகும்.

அப்போது, 57 வயதான அருந்ததி பட்டாச்சார்யா, பணிமூப்பு அடிப்படையில் தலைவர் பதவிக்கு வரும் பட்டியலில் முன்னிலையில் இருந்தார். நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அலுவலராக பதவி வகித்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு ஸ்டேட் வங்கியின் தலைவராகவும், சக்திவாய்ந்த பெண்மணியாகவும் ஆனார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Govt extends SBI chief Arundhati Bhattacharya&#39;s tenure by one year: Sources.</p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://twitter.com/PTI_News/status/782160855882342401">October 1, 2016</a></blockquote>
ஸ்டேட் வங்கித் தலைவராக நியமிக்கப்பட அருந்ததியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி, அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக் காலத்தை மத்திய அரசு மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார்.

Govt extends SBI chief Arundhati Bhattacharya's tenure by one year: Sources #SBI #ArundhatiBhattacharya #SBIChief

அடுத்த செய்தி

டிரெண்டிங்