ஆப்நகரம்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய வெப்சைட் அறிமுகம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்கள் அடங்கிய புதிய போர்ட்டல் நாளை அறிமுகம் செய்யப்படுகிறது.

Samayam Tamil 25 Aug 2021, 10:14 pm
கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் என இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அத்திட்டங்கள் சரியாக இவர்களைச் சென்றுசேர்வதில்லை என்ற பேச்சு உள்ளது. அதேபோல, இவர்களின் பணி நிலவரம் மற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்த சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதற்காகவே புதிய போர்ட்டல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil e shram


இ-ஷ்ரம் என்ற பெயரில் நாளை (ஆகஸ்ட் 26) இந்த போர்ட்டலை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரின் பணி விவரங்கள் அடங்கியிருக்கும். பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புகள் இந்த போர்ட்டலில் இடம்பெற்றிருக்கும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களை நேரடியாகச் சென்று சேர இந்தத் திட்டம் உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் மெகா சாதனை... இந்தியாவிலேயே 4ஆவது நிறுவனம்!

இந்த போர்ட்டலில் 38 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களைப் பதிவுசெய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலுடன் 14434 என்ற டோல் ஃபிரீ நம்பரும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும். தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை இந்த போர்ட்டலில் பதிவுசெய்ய வேண்டும். இன்னும் பல அம்சங்கள் இந்த போர்ட்டலில் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்