ஆப்நகரம்

உளுந்துக்கு தட்டுப்பாடு... இறக்குமதியை உயர்த்தத் திட்டம்!

உள்நாட்டில் உளுந்து உற்பத்தி குறைந்து சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதால் ஜூன் மாதம் வரையில் உளுந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

Samayam Tamil 20 Jan 2020, 5:58 pm
இந்த ஆண்டின் காரிஃப் பருவத்தில் பயிர் உற்பத்தி மந்தமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் பயிர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, சந்தையில் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் உளுந்து உற்பத்தி சென்ற ஆண்டை விட 50 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு சந்தைகளில் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டிலிருந்து உளுந்து உற்பத்தியை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரையில் 4 லட்சம் டன் அளவு உளுந்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
Samayam Tamil உளுந்துக்கு தட்டுப்பாடு இறக்குமதியை உயர்த்தத் திட்டம்


முதலில் 1.5 லட்சம் டன் உளுந்து இறக்குமதிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சென்ற டிசம்பர் மாதத்தில் இறக்குமதி வரம்பு உயர்த்தப்பட்டது. எனினும் தற்போது வரையில் 2 லட்சம் டன் அளவு உளுந்து மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே உளுந்து இறக்குமதிக்கான கால வரம்பை உயர்த்த வேண்டும் என்று இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி, ஜூன் மாதம் வரையில் இறக்குமதி காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வரி வசூல் இலக்கை அடையுமா மத்திய அரசு?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 25 முதல் 30 லட்சம் டன் வரையில் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டின் காரிஃப் பருவத்தில் அதிக சேதம் இருந்ததால் உளுந்து உற்பத்தியில் 50 சதவீதம் வீழ்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு உளுந்து இறக்குமதி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. உளுந்து மட்டுமல்லாமல் இருப்பில் இருக்கும் 5 லட்சம் டன் அளவு பருப்பையும் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது. இதில் 1 லட்சம் டன் அளவு பருப்பு மாநில அரசுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

சிறகொடிந்த விமானங்கள்... விமானப் பயணத்தில் பின்னடைவு!

வெங்காய உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு சந்தையில் வரத்து குறைந்து விலையேற்றம் நீடித்தது போல, உளுந்துக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு முன்கூட்டியே இறக்குமதியில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்