ஆப்நகரம்

சாலைகள் அமைக்க ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிதின் கட்கரி!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலைக் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 7 May 2020, 7:32 pm
ஊரடங்கு பகுதி அளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அதற்கான முதலீடுகளை எவ்வாறு ஈர்ப்பது, அரசின் நிதி ஆதாரத்தை எவ்வாறு பெருக்குவது போன்ற விஷயங்களில் மத்திய அரசு அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதற்காகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் வீடியோ கான்பெரன்ஸ் வாயிலாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Samayam Tamil nitin gadkari


அந்த வகையில், கொரோனா பாதிப்பால் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புடன் மத்திய அமைச்சர் நிதின் பேசினார். மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரான நிதின் கட்கரி, வீடியோ கான்பெரன்ஸ் மூலம் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இன்று (மே 7) கலந்துரையாடினார்.

கதவைத் தட்டும் மகாலட்சுமி... 45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் கடன்... எப்படி வாங்குவது?

இக்கூட்டத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, அவர்கள் தரப்பிலிருந்து சில ஆலோசனைகளையும் வழங்கினர். ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி திரும்புவதற்கு அரசு தரப்பில் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். குறைகளைக் கேட்டறிந்த நிதின் கட்கரி, இத்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அளிக்கும் என்று உறுதியளித்தார். மேலும், பிரச்சினைகள் குறித்து, அரசு மற்றும் இதர துறைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு... இதுலலாம் சிக்கனம் பாக்கலாமா பாஸ்?

நிதின் கட்கரி மேலும் பேசுகையில், “வர்த்தகம் என்பதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது சகஜம்தான். கொரோனா போன்ற மோசமான காலங்கள் வரும்போது அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் அதிலிருந்து மீண்டு வருவதற்கும் முன்கூட்டியே திட்டமிட வேண்டியது அவசியமாகும். உலகளவில் போட்டியிடக் கூடிய அளவுக்கு திறமையை வளர்த்துக் கொள்ள புதுமை, தொழில்நுட்பம், ஆராய்ச்சித் திறன் ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்