ஆப்நகரம்

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு!

மின்னணு வர்த்தக இணையதளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான நம்பகத்தன்மை தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு வகுக்கிறது.

Samayam Tamil 28 May 2022, 1:49 pm
கடைகளில் ஏறி இறங்கி பொருட்களை வாங்குவதை விட, அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஷாப்பிங் செய்து வாங்குவதையே இப்போது நிறையப் பேர் விரும்புகின்றனர். இப்போது எல்லாமே ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. ஆன்லைன் ஷாப்பிங் செய்து வாங்குவதற்கே ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறைய ஆப்கள் வந்துவிட்டன. இவற்றை மக்களும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
Samayam Tamil shopping


பொதுவாகவே இதுபோன்ற வெப்சைட்களிலும் ஆப்களிலும் மக்கள் தங்களுக்குத் தேவையான ஒரு பொருளை வாங்கும்போது, அந்தப் பொருள் பற்றிய தகவலைத் தெரிந்துகொள்ள நினைப்பார்கள், ஆனால் அப்படி முழுவதுமாகத் தெரிந்துகொள்ளும் வசதி இப்போது இல்லை. ஏற்கெனவே அந்தப் பொருளை வாங்கிய நபர்கள் பதிவிட்டுள்ள ரிவ்யூவை வைத்தே ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடிகிறது. சிலர் தவறான ரிவ்யூக்களையும் பதிவிட்டிருப்பார்கள். இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு நிறைய குழப்பமும் சிரமமும் இருக்கிறது.

இந்நிலையில் ஈ-காமர்ஸ் இணையதளங்களில் போலியான விமர்சனங்களை கண்காணிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் உருவாக்கவிருக்கிறது. இந்தியாவில் இயங்கும் மின்னணு வர்த்தக நிறுவனங்களால் பின்பற்றப்படும் நடைமுறைகளை நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆய்வு செய்யவிருக்கிறது.

ஜூன் முதல் எல்லாம் மாறப் போகுது... பொதுமக்கள் கவனத்துக்கு!

இதற்காக இந்திய விளம்பரங்கள் தரநிலை கவுன்சிலுடன் இணைந்து மின்னணு வர்த்தக நிறுவனங்கள், நுகர்வோர் மன்றங்கள், நுகர்வோர் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுடன் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆலோசனை செய்தது. அதில் ஆன்லைன் ஷாப்பிங் தொடர்பான நிறைய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வெப்சைட்களிலும் ஆப்களிலும் பொருட்களை நேரடியாக வாங்குவது, ஆய்வுசெய்யும் வாய்ப்பு இல்லாததால் அந்தப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்கனவே பயன்படுத்திய பயனாளர்கள் இணைய தளங்களில் பதிவிடும் அனுபவம் மற்றும் கருத்துக்களையே பொதுமக்கள் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பொருட்களுக்கான மிகவும் பொருத்தமான திறனாய்வுகளை மின்னணு வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்வு செய்கிறார்கள் என்பதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் இதற்கான கொள்கை மற்றும் விதிமுறைகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்