ஆப்நகரம்

என்பிசிசி நிறுவனத்தின் 15% பங்குகளை விற்க மத்திய அரசு அனுமதி

பொதுத்துறையை சேர்ந்த என்பிசிசி நிறுவனத்தில் இருந்து, 15% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

TNN 13 Jul 2016, 7:48 pm
பொதுத்துறையை சேர்ந்த என்பிசிசி நிறுவனத்தில் இருந்து, 15% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil govt to sell 15 stake in nbcc eyes rs 1706 cr
என்பிசிசி நிறுவனத்தின் 15% பங்குகளை விற்க மத்திய அரசு அனுமதி


பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து, கணிசமான பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக, நடப்பு நிதியாண்டுக்குள், ரூ.56,500 கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி, தற்போது என்பிசிசி எனப்படும் நேஷனல் பில்டிங்க்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து, 15% சதவீத பங்குகளை விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் மத்திய அரசு 90% பங்குகளை நிர்வகித்து வருகிறது. இதில், குறிப்பிட்ட பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக, ரூ.1,706 கோடி நிதி திரட்ட முடியும் என கூறப்படுகிறது. இந்நடவடிக்கை மேற்கொள்வதற்காக, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, முறைப்படி பங்கு விற்பனை விரைவில் நடத்தப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்