ஆப்நகரம்

பெட்ரோல் வரி உயர்வால் அரசுக்கு என்ன லாபம்?

பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரி உயர்வால் அரசுக்கு ரூ.1.7 லட்சம் கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 May 2020, 8:25 pm
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பெட்ரோல் - டீசலுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தாலும் அவற்றின் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளால் அரசுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. அதனால்தான் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்காமல் விலக்கி வைத்துள்ளது மத்திய அரசு. தற்போது கொரோனா பீதியால் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலிலும் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil petrol diesel


ஊரடங்கு நடவடிக்கையால் மத்திய அரசின் வரி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதி திரட்டும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாக, பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரியை நேற்று (மே 5) உயர்த்தியது மத்திய அரசு. பெட்ரோலுக்கான வரி லிட்டருக்கு 10 ரூபாயும், டீசலுக்கான வரி லிட்டருக்கு 13 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரியேற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதனால் பெட்ரோல் - டீசல் விலையில் ஏற்றம் எதுவும் இருக்காது எனவும் மத்திய அரசு கூறியது.

கார் வாங்கணுமா? உங்கள் வீடு தேடி கார் வரும்!

இந்த வரி உயர்வின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி உயர்வால் இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.1.7 லட்சம் கோடி வரையில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஏப்ரல் மாதத்துக்கான வருவாய் ஊரடங்கு காரணமாக மந்தமாக இருப்பதால் எஞ்சிய 11 மாதங்களில் ரூ.1.6 லட்சம் கோடி வரையில் வருவாய் கிடைக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுபடியும் வேலைக்கு போகணுமா.... பதறும் பணியாளர்கள்!

ஏற்கெனவே மார்ச் 14ஆம் தேதியில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த ஆண்டில் அரசுக்கு ரூ.39,000 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதையும் சேர்த்து இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி வரையில் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலையில் மத்திய கலால் வரியின் பங்கு 46 சதவீதமாக இருக்கிறது. இதில் மதிப்புக் கூட்டு வரியையும் சேர்த்தால் பெட்ரோல் - டீசல் விலையில் 60 சதவீதம் வரி வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்