ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்.. விருதுநகரில் குறைதீர் கூட்டம்!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Samayam Tamil 27 Mar 2023, 4:39 pm
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த குறைதீர் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மார்ச் 30ஆம் தேதியன்று நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
Samayam Tamil insurance


மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையிலும், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த குறைதீர் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் 30.03.2023 அன்று பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்படி கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய காப்பீட்டு திட்டம் என்றால் என்ன?

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், ரூ.4 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறும் வசதி கிடைகும். மேலும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி இருந்தது. இத்திட்டம் நிறைவடையும் சூழலில், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை 2025ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் குறித்த குறைதீர் கூட்டம்தான் விருதுநகர் மாவட்டத்தில் இம்மாத இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்