ஆப்நகரம்

ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எந்த பொருளுக்கு எவ்வளவு வரி விதிப்பது என இறுதி ஆலோசனை

பல தரப்பிலும் எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின்கீழ், எந்த பொருளுக்கு, எவ்வளவு வரி விதிப்பது என்பதை இறுதி செய்யும் கூட்டம் ஸ்ரீநகரில் தொடங்கியுள்ளது.

TNN 18 May 2017, 9:40 am
பல தரப்பிலும் எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின்கீழ், எந்த பொருளுக்கு, எவ்வளவு வரி விதிப்பது என்பதை இறுதி செய்யும் கூட்டம் ஸ்ரீநகரில் தொடங்கியுள்ளது.
Samayam Tamil gst council meeting begins in srinagar today to finalize tax rates for goods and services
ஸ்ரீநகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எந்த பொருளுக்கு எவ்வளவு வரி விதிப்பது என இறுதி ஆலோசனை


அனைத்துவிதமான சரக்குப் பொருட்கள், வர்த்தக மற்றும் தொழில் சேவைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பாக, ஒரே வரி விதிக்கும் வகையில், ஜிஎஸ்டி மசோதா அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட்டு, குடியரசுத் தலைவரின் இசைவும் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் இதுபற்றிய 2 நாள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், உப்பு தொடங்கி, கார்கள், பண்ணை வீடுகள் வரை ஒவ்வொன்றுக்கும், எவ்வளவு வரி விதிப்பது, எந்த தொழிலுக்கு எவ்வளவு சேவை வரி வாங்குவது உள்ளிட்ட விசயங்கள் இறுதி செய்யப்பட உள்ளன.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில், நாட்டின் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

மத்திய பாஜக அரசின் முக்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

The goods and services tax (GST) Council, chaired by Union finance minister Arun Jaitley and including representatives from 32 states and Union territories as members, will put together the final shape of the indirect tax regime.

அடுத்த செய்தி

டிரெண்டிங்