ஆப்நகரம்

ஜிஎஸ்டி வெப்சைட்டில் பிரச்சினை - இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!

ஜிஎஸ்டி வெப்சைட்டில் உள்ள பிரச்சினையை விரைந்து சரிசெய்து கொடுக்க இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 May 2022, 3:12 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இதற்கு தனியாக ஒரு போர்ட்டலும் அறிமுகம் செய்யப்பட்டு, வரித்தாக்கல்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போர்ட்டலில் அடிக்கடி திருத்தங்களும் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்ப அந்த போர்ட்டலில் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது.
Samayam Tamil gst


இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கலில் வாடிக்கையாளர்கள் நிறைய சிரமங்களைச் சந்திப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதனால் கால அவகாசம் முடிவதற்குள் அவர்களால் ரிட்டன் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்கு தீர்வு காணும் வகையில் வருமான வரித் துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. போர்ட்டலில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்வதோடு, வரித் தாக்கலுக்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்தும் வருமான வரித் துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜிஎஸ்டி போர்ட்டலில் தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்து தர இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 12ஆம் நாள் முதல் நிறுவனங்களின் ரிட்டன் படிவங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதற்கான வசதி இருக்கும். ஆனால் இப்போது அதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ரசீதுகளை பதிவிறக்கும் செய்வதில் நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

மூன்று சிலிண்டர்கள் இலவசம் - பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

இதனால் ஜிஎஸ்டி வெப்சைட்டை உருவாக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம் அதற்கு விரைந்து தீர்வுகாண அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னர் வருமான வரித் துறைக்கான புதிய வெப்சைட்டிலும் இதேபோல பிரச்சினைகள் ஏற்பட்டு அதை இன்ஃபோசிஸ் நிறுவனம் விரைந்து சரிசெய்ய கால அவசாகம் வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்