ஆப்நகரம்

டிசம்பர் மாத ஜி.எஸ்.டி வசூல் ரூ.1,03,184 கோடி

டிசம்பர் மாதம் 2019ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 1 Jan 2020, 5:38 pm
டெல்லி: டிசம்பர் மாதம் ரூ.1,03,184 கோடி ஜி.எஸ்.டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி 2019ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.19,962 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.26,792 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (இறக்குமதி வரி ரூ.21,295 கோடி உள்பட) ரூ.48,099 கோடியும், செஸ் வரி ரூ.8,331 கோடி வசூலாகியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, டிசம்பர் 2019இல் ஜி.எஸ்.டி. வருவாய் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ. 91,916 கோடியும், நவம்பர் மாதம் ரூ.1,03,492 கோடியும் வசூலாகியுள்ளது.


மத்திய அரசு நிதி நிலையைச் சமாளிக்கவும் மாநில அரசுகளுக்கு வரி வருவாய் இழப்பீடு வழங்கவும், மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி வருவாய் ஈட்ட வேண்டியது அவசியம் என்ற நிலையில், நவம்பர், டிசம்பர் மாதங்கள் அதனை பூர்த்தி செய்த்துள்ளன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியின்படி, 2019-20ஆம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி அதிகமாக வசூலான மாநிலங்களில் தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது.


மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இழப்பீடு வழங்குகிறது. ஜிஎஸ்டி அமலான ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடு கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த இழப்பீட்டை மத்திய அரசு மேலும் மூன்று ஆண்டுகள் தொடர வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்