ஆப்நகரம்

கடன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்: மத்திய அரசின் அடடே சலுகை!

கடன் வாங்கியோருக்கு தீபாவளி பரிசாக மத்திய அரசு அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது.

Samayam Tamil 25 Oct 2020, 12:41 pm

கொரோனா பாதிப்பை தடுக்க மார்ச் 25ஆம் தேதி நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த காலத்தில் மக்களுக்கு நெருக்கடியை குறைப்பதற்காக கடன் மொராடோரியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை செலுத்த வேண்டிய கடன் தவணைகளை தாமதமாக செலுத்திக்கொள்ளலாம்.
Samayam Tamil Money


எனினும், செப்டம்பர் மாதம் முதல் இயல்புநிலை திரும்பிவிட்டது. மொராடோரியம் வழங்குவதற்கான அறிகுறிகளும் இல்லை. எனினும், கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி செய்ய வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு ஒரு அட்டகாசமான தீபாவளி பரிசை வழங்குவதாக அறிவித்திருக்கிறது

அதாவது, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கடன்களுக்கு, எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தை பணமாக வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஐசிஐசிஐ வங்கி இனி இயங்காது: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வீட்டுக் கடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன், MSME கடன், நுகர்வோர் கடன், நுகர்வு கடன், பெர்சனல் லோன் உள்ளிட்டவற்றுக்கு இத்திட்டம் பொருந்தும். இதற்காக அரசு 6,500 கோடி ரூபாய் செலவிட வேண்டுமென அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

எனினும், மொராடோரியம் சலுகையை பயன்படுத்தாமல் கடன் தவணைகளை சரிவர செலுத்திய வாடிக்கையாளர்கள் மட்டுமே இச்சலுகையை பெறமுடியும். நவம்பர் 5ஆம் தேதிக்குள் பணம் செலுத்தப்பட்டுவிடும். மார்ச்-ஆகஸ்ட் காலகட்டத்தில் கடனை செலுத்தி முடித்து மூடப்பட்ட கணக்குகளுக்கும் இச்சலுகை பொருந்தும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்