ஆப்நகரம்

வாகன ஓட்டிகளுக்கு இனி இந்த தலைவலி இல்லை!

டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்களை இனி வண்டியிலேயே வைத்துக்கொண்டு அலையத் தேவையில்லை.

Samayam Tamil 29 Sep 2020, 6:23 pm
வாகனம் ஓட்டும்போது ஆர்.சி. புக், டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ போக்குவரத்து காவலரிடம் சிக்கினால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்படும். இது பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்குப் பெரிய தலைவலியாகவே இருக்கும். ஆனால் இனி அந்தப் பிரச்சினையே இருக்காது. புதிய மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
Samayam Tamil driving license


இனி நீங்கள் வாகனம் தொடர்பான இந்த ஆவணங்களை சாஃப்ட் காப்பியாக வைத்திருந்தாலே போதும். போக்குவரத்து காவலர் விசாரணையின் போது, இவை முழுமையாக செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காகிதத்தால் உள்ள ஆவணங்களை நீங்கள் காட்டத் தேவையில்லை. அதேபோல, இனி நீங்கள் வாகனம் ஓட்டும்போது வழியைக் காண மொபைல் போனையும் பயன்படுத்தலாம். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மோட்டார் வாகன விதிகள் 1989-இல் செய்யப்பட்ட பல்வேறு திருத்தங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேங்க்ல இருந்து போன் வருதா? உஷாரையா உஷாரு...!

2020 அக்டோபர் 1 முதல் வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஈ-சலான் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஐ.டி. போர்ட்டல் மூலம் பராமரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. டிரைவிங் லைசன்ஸைப் பொறுத்தவரையில், அது தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது தடை செய்யப்பட்டிருந்தாலோ அது ஐடி போர்ட்டலிலேயே பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இலவச சமையல் சிலிண்டர் எப்படி வாங்குவது?

புதிய விதிகளின்படி, நீங்கள் வண்டி ஓட்டும்போது வழித்தடத்தைக் காண்பதற்கு மேப் போன்றவற்றுக்காக மொபைல் போனைப் பயன்படுத்தலாம். ஆனால் அழைப்பு வந்தாலோ மற்ற காரணங்களுக்காகவோ நீங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி வாகனம் ஓட்டும்போது மொபைல் போனில் பேசினால் ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்