ஆப்நகரம்

LIC வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி பிரீமியம் கட்டுவது ஈசி!

எல்ஐசி பிரீமியம் தொகையைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Apr 2021, 6:51 pm
பாலிசிதாரர்களுக்கு உதவும் வகையில் எல்ஐசி நிறுவனம் பேடிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இனி எல் ஐசி பாலிசிதாரர்கள் தங்களது பாலிசிக்கான பிரீமியம் தொகையை பேடிஎம் மூலமாகவே செலுத்திக்கொள்ளலாம். பிரீமியம் தொகை மட்டுமல்லாமல் எல்ஐசி தொடர்பான அனைத்து வகைப் பரிவர்த்தனைகள் மற்றும் கட்டணங்களையும் பேடிஎம் மூலமாகவே இனி செலுத்திக் கொள்ளலாம்.
Samayam Tamil LIC


கொரோனா பாதிக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் நிறையப் பேர் பிரீமியம் செலுத்தியுள்ளதாகவும், இதன் மூலமாக ரூ.60,000 கோடி பிரீமியம் வசூல் செய்யப்பட்டதாகவும் எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கிகள் வாயிலாகவும் இக்காலத்தில் கட்டணம் செலுத்தியுள்ளனர். டிஜிட்டல் முறையில் மொத்தம் 8 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், எல்ஐசி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

ரூ.2,000 பணம் வந்திருச்சா? வரலனா உடனே இதைப் பண்ணுங்க!!
எல்ஐசி நிறுவனம் தனது 1.14 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், மாதச் சம்பளத்தில் 25 சதவீதத்துக்கு மேல் உயர்வு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியது. எல்ஐசி நிறுவனத்தின் ஒட்டுமொத்த சம்பள பில் ஆண்டுக்கு 2,700 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் பணி, இரண்டு நாட்கள் விடுமுறை என்ற முறை அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்