ஆப்நகரம்

HCL, Airtel, Accenture IT jobs recruitment 2022: ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. திடீர் முடிவெடுத்த நிறுவனங்கள்!

எச்சிஎல், அசென்ச்சர் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் ஏராளமான ஊழியர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளன.

Samayam Tamil 17 May 2022, 4:00 pm
கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் பலரும் வேலைவாய்ப்பு இழந்தது மட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படாமல் இருந்தன. எனினும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை படிப்படியாக மாறி வருகிறது.
Samayam Tamil it employees


இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் ஐடி ஊழியர்களை பெருமளவில் வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளன. இதில் எச்சிஎல், ஏர்டெல், அசென்ச்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான ஐடி ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளன.

எச்சிஎல்

முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL) வியட்நாம், ரொமானியா, கோஸ்டா ரிகா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொழிலை விரிவுபடுத்தப்போவதாகவும், அங்கெல்லாம் நிறைய ஊழியர்களை பணியில் அமர்த்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுபோக இந்தியாவிலும் ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

சம்பளம் டபுள் மடங்கு உயர்வு.. ராஜினாமா செய்யும் ஊழியர்களை தடுக்க முடிவு!
ஏர்டெல்

ஏர்டெல் (Airtel) நிறுவனம் புனேவில் உள்ள சென்டரில் 500 ஐடி ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுவொரு தொழில்நுட்ப மையம் என்பதால் ஐடி ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது ஏர்டெல்.

அசென்ச்சர்


முன்னணி ஐடி நிறுவனமான அசென்ச்சர் (Accenture) ஃப்ரஷர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 30,000க்கு மேற்பட்ட ஃப்ரஷர்களை நியமிக்க அசென்ச்சர் முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் அசென்ச்சர் நிறுவனத்தில் 2.5 லட்சத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்