ஆப்நகரம்

UPI: பணம் அனுப்புவதற்கான ரூல்ஸ் மாற்றம்.. வெளியான திடீர் அறிவிப்பு!

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகளை எச்டிஎஃப்சி வங்கி மாற்றியுள்ளது.

Samayam Tamil 12 Apr 2022, 6:06 pm
கடந்த சில ஆண்டுகளில் யூபிஐ (UPI) பரிவர்த்தனைகள் பொதுமக்களின் வாழ்வில் இயல்பாகிவிட்டது. தினசரி யூபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. மொபைலிலேயே உடனடியாக ஈசியாக பணம் அனுப்ப யூபிஐ உதவுகிறது.
Samayam Tamil UPI


Gpay, Phonepe, Paytm என பல்வேறு ஆப்ஸ் மூலம் யூபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank) யூபிஐ பரிவர்த்தனைகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது.

எனவே, எச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள், குறிப்பாக யூபிஐ பயனர்கள் இதை தெரிந்துகொள்வது மிக அவசியமாக உள்ளது. எச்டிஎஃப்சி புதிய விதிமுறைப்படி, யூபிஐ பரிவர்த்தனை பயன்படுத்துவோர் ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுப்ப முடியும். அல்லது ஒரு நாளைக்கு 10 பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

வீட்டுக் கடன்.. இவ்வளவு கம்மி வட்டிக்கு எங்கு கிடைக்கும்?
இந்த பரிவர்த்தனைகள் 24 மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படும். 10 பரிவர்த்தனை வரம்பு என்பது பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் பொருந்துமே தவிர பில் கட்டணம், கடைகளில் பணம் செலுத்துவது, ஷாப்பிங் பரிவர்த்தனைகள் ஆகியவற்றுக்கு பொருந்தாது.

மேலும், மொபைல், சிம் கார்டு, மொபைல் நம்பர் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றியிருந்தால் ஆண்ட்ராய்டு போனில் முதல் 24 மணி நேரம் வரையிலும், ஐபோனில் 72 மணி நேரம் வரையிலும் 5000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்