ஆப்நகரம்

கிரெடிட் கார்டு: HDFC வங்கியுடன் கைகோர்க்கும் பேடிஎம்!

கிரெடிட் கார்டுகளை அதிகமாக வழங்குவதற்காக பேடிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஹெச்டிஎஃப்சி வங்கி.

Samayam Tamil 20 Sep 2021, 5:03 pm
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி சென்ற ஆண்டின் இறுதியில் ரிசர்வ் வங்கியின் பிடியில் சிக்கியது. விதிமுறை மீறல் காரணமாக புதிதாக கிரெடிட் கார்டு வழங்கத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவால் ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக கிரெடிட் கார்டு வழங்க முடியாத சூழல் இருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது.
Samayam Tamil hdfc bank


அதன் பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதியில் இந்தத் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் கிரெடிட் கார்டு பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது ஹெச்டிஎஃப்சி வங்கி. பண்டிகை சீசன் வந்துவிட்டதால் வாடிக்கையாளர்கள் அதிகமாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்து கிரெடிட் கார்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்த ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக பேடிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களையும் ஹெச்டிஎஃப்சி வங்கி தனது சேவைக்குள் ஈர்க்க முடிவுசெய்துள்ளது.

இந்த ஒரு கார்டு இருந்தால் போதும்.. ஏராளமான ஹெல்த் சலுகைகளை அள்ளலாம்!
பேடிஎம் நிறுவனத்துக்கு 330 மில்லியன் வாடிக்கையாளர்களும் 21 மில்லியன் வணிகர்களும் இருக்கின்றனர். இவர்களிடத்தில் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டுகளைக் கொண்டுசெல்ல இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் முடிவுக்குள் ஒவ்வொரு மாதமும் 5 லட்சம் கிரெடிட் கார்டுகளை விநியோகிக்க ஹெச்டிஎஃப்சி வங்கி இலக்கு வைத்துள்ளது. பேடிஎம் மொபைல் ஆப்பில் ஷாப்பிங், கட்டணம் செலுத்துவதுa மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் எடுக்கும் வசதி உள்ளது. அதை மையமாக வைத்து தனது தொழிலை விரிவுபடுத்த ஹெச்டிஎஃப்சி வங்கி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்