ஆப்நகரம்

நல்லத்தான இருந்த? ஏன் இப்படி பண்ற? எச்டிஎஃப்சி பங்குதாரர்கள் அப்செட்!

தொடர்ந்து மூன்று தினங்களாக எச்டிஎஃப்சி இரட்டை பங்குகள் சரிந்து வருவதால் பங்குதாரர்கள் அப்செட்.

Samayam Tamil 7 Apr 2022, 1:41 pm
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) செயல்பட்டு வருகிறது. அதேபோல இந்தியாவின் மிகப்பெரிய ஹவுசிங் பைனான்ஸ் வங்கியாக எச்டிஎஃப்சி (HDFC) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
Samayam Tamil HDFC Merger


இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் எச்டிஎஃப்சி வங்கியை இணைக்க முடிவு செய்யப்பட்டுவிட்டதாக ஏப்ரல் 4ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு பங்குச் சந்தையில் பூகம்பத்தை கிளப்பியது.

அறிவிப்பு வெளியான உடன் எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி இரண்டு பங்குகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இரு நிறுவனங்களும் இணைக்கப்படுவது பற்றிய தகவல் மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டதால் யாரும் இந்த அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை.

நானும் மதுரக்காரன்தாண்டா.. எலான் மஸ்க் செய்த காரியம்.. ஆடிப்போன ட்விட்டர்!
எனவே, இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியான பின் இரண்டு பங்குகளும் பயங்கர வேகத்தில் உயர்ந்தன. எனினும், ஏப்ரல் 5ஆம் தேதி முதல் இன்று வரை இரண்டு பங்குகளும் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகின்றன. நேற்று மட்டும் இரண்டு பங்குகளும் 3 விழுக்காடுக்கு மேல் சரிந்தன.

இந்நிலையில் இன்றும் எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இதற்கு காரணம் என்ன? திங்கள்கிழமையன்று இரண்டு பங்குகளும் கடுமையாக உயர்ந்ததால் ஏராளமானோர் இரண்டு பங்குகளையும் வாங்கிக் குவித்தனர்.

எனினும், லாபத்தை எடுப்பதற்காக பலரும் எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி வங்கி பங்குகளை தொடர்ந்து விற்று வருகின்றனர். இதனால் இரண்டு பங்குகளின் விலையும் சரிந்துகொண்டே போகிறது. இதுமட்டுமல்லாமல், கடந்த மூன்று தினங்களாக பங்குச் சந்தையும் நெகட்டிவாக இருப்பது மற்றொரு காரணமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்