ஆப்நகரம்

டீசல் விலையேற்றத்தால் உயரும் லாரி வாடகை!

கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் லாரி வாடகை நான்கு சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 6 Jan 2020, 7:33 pm
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே பெட்ரோல் - டீசல் விலை ஏற்றத்திலேயே இருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேசச் சந்தையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அதனால் கச்சா எண்ணெய் விலையும், அதன் விளைவாக இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையும் உயர்வாகவே இருந்தன.
Samayam Tamil டீசல் விலையேற்றத்தால் உயரும் லாரி வாடகை


டீசல் விலை உயரும் போது, லாஜிஸ்டிக் சேவையிலும் பாதிப்பு ஏற்படும். டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்க சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்நிலையில், இந்த ஜனவரி மாதத்தின் 1 முதல் 6 வரையிலான நாட்களில் இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் மூன்று முதல் நான்கு சதவீதம் வரையில் உயர்ந்துள்ளதாக இந்தியப் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் வாடகைக் கட்டணம் 2 முதல் 2.5 சதவீதம் வரையில் குறைவாக இருந்த நிலையில், புத்தாண்டு பிறந்ததிலிருந்து வாடகைக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கம்: விலையேற்றத்தால் வந்த விளைவு!

டிசம்பர் மாதத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.16 வரையில் குறைந்தபோதே லாரி வாடகைக் கட்டணம் 2.5 சதவீதம் வரையில் உயர்ந்தது. அம்மாதத்தில் சரக்குப் போக்குவரத்தில் 15 சதவீதம் வரையில் வீழ்ச்சி ஏற்பட்டது. தொழில் துறை உற்பத்தி முடக்கம், உள்கட்டுமானத் துறை வளர்ச்சியில் பின்னடைவு போன்ற காரணிகளும் இதில் அடங்கும். 2019ஆம் ஆண்டில் லாரி வாடகைக் கட்டணம் 10.4 முதல் 19.4 சதவீதம் வரையில் குறைந்திருந்தது. அந்த ஆண்டில் டீசல் விலை 8.2 சதவீதம் வரையில் உயர்ந்திருந்த போதும் லாரி வாடகை குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்