ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... ஹோலி பண்டிகைக்கு முன் பணம்!!

அரசு ஊழியர்களுக்கான ஊதியச் சலுகைகள் ஹோலி பண்டிகைக்கு முன்னர் வந்து சேரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2021, 2:40 pm
சில மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்பாக சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளன. இது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஊதியச் சலுகை கிடைக்கவிருக்கிறது. சிறப்பு விழா கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ரூ.10,000 அட்வான்ஸ் வழங்குகிறது. இந்த சிறப்பு விழா கொடுப்பனவுத் திட்டம் 2021 மார்ச் 31 வரை இருக்கும்.
Samayam Tamil salary


மத்தியப் பிரதேசம்!

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப் படி மூன்றாவது தவணை நிலுவைத் தொகையில் 75 சதவீதப் பணத்தை ஹோலிக்கு முன் வழங்க மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. மத்திய பிரதேச நிதித் துறையும் ஹோலி பண்டிகைக்கு முன்பே ஊழியர்களின் நிலுவைத் தொகை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

திரிபுரா!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, திரிபுரா அரசு 2021 மார்ச் 1 முதல் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுடன், ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படியில் 3 சதவீத உயர்வு கிடைக்கும்.

தெலுங்கானா!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 சதவீத உயர்வை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இது தவிர, அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள்!

நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கிறது. ஜூலை 1 முதல் ஊழியர்கள் அகவிலைப்படியின் முழுப் பலனையும் பெறத் தொடங்குவார்கள் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியின் மூன்று தவணைகளும் 2021 ஜூலை 1 முதல் வெளியிடப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.

வேலை நாட்கள்!

ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்வது மற்றும் மூன்று நாட்கள் வார விடுமுறை விடுவது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், நான்கு நாட்கள் வேலை மற்றும் மூன்று நாட்கள் வார விடுமுறை அளிக்கும் முறையை அமல்படுத்த எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். இதை அவர் மக்களவையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்