ஆப்நகரம்

வீட்டுக் கடனுக்கு இனி அதிக ஈஎம்ஐ கட்டணும்!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

Samayam Tamil 20 Apr 2021, 6:25 pm
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மார்ச் 31ஆம் தேதி வரையில் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன்களை வழங்கி வந்தது. அச்சலுகை முடிந்த பிறகு ஏப்ரல் 1 முதல் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போதைய நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.95 சதவீதமாக உள்ளது. அதற்கு முன்னர் 6.7 சதவீதத்தில் வீட்டுக் கடனை வாடிக்கையாளர்கள் வாங்கினர். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் தங்களது கடன் விகிதங்களை உயர்த்தி வருகின்றன.
Samayam Tamil home loan


வட்டி விகிதம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் கடன் வாங்கியவர்களுக்கு சந்தேகம் இருக்கும். ஈஎம்ஐ தொகையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? அதிக மாதங்கள் ஈஎம்ஐ செலுத்த வேண்டுமா போன்ற சந்தேகங்கள் ஏற்படலாம்.

PF பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்?
உதாரணமாக, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டு, நீங்கள் ரூ.50 லட்சம் கடன் 20 ஆண்டு கால வரம்பில் வாங்கியிருந்தால், வட்டி உயர்வுக்கு பிறகு நீங்கள் 23 மாதங்கள் கூடுதலாக ஈஎம்ஐ செலுத்த வேண்டும். ஒருவேளை ஈஎம்ஐ செலுத்தும் கால அளவை மாற்ற வேண்டாம் என்று நினைத்தால் ஈஎம்ஐ தொகையில் ரூ.1,515 சேர்த்து செலுத்த வேண்டும். அதேநேரம், ஓய்வுக் காலத்தை நெருங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது ஈஎம்ஐ காலத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீட்டிக்க முடியாது. அதிக ஈஎம்ஐ தொகை சேர்த்து செலுத்த வேண்டும்.

வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தும் கால அளவை நீட்டிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவ்வாறு நீட்டிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அவ்வாறு நீட்டித்தால் அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்