ஆப்நகரம்

ஹோண்டா,ஹூண்டாய் நிறுவனங்கள் கார் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு

கார்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, விற்பனை விலையை உயர்த்துவதாக, ஹோண்டா,ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

TOI Contributor 4 Mar 2016, 6:12 pm
கார்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, விற்பனை விலையை உயர்த்துவதாக, ஹோண்டா,ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Samayam Tamil honda hyundai hikes vehicle prices
ஹோண்டா,ஹூண்டாய் நிறுவனங்கள் கார் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு


சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட் அறிக்கையில், கார்களுக்கான கட்டமைப்பு வரி, அவற்றின் ரகத்திற்கேற்ப, ஒன்று முதல் 4% வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தி வருகின்றன.

ஏற்கனவே, மெர்சிடஸ் பென்ஸ், மாருதி சுசூகி இந்தியா,மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் கார் விலையை உயர்த்துவதாக, அறிவித்திருந்தன. இந்நிலையில்,ஹோண்டா கார்ஸ் இந்தியா,ஹூண்டாய் நிறுவனங்களும் கார் விலை உயர்வு பற்றி அறிவித்துள்ளன.

ஹோண்டா கார்ஸ் நிறுவனம், கார்களின் ரகத்திற்கேற்ப, ரூ.4,000 முதல் ரூ.79,000 வரை கார் விலை உயர்வு இருக்கும் என்று கூறியுள்ளது.

இதேபோன்று, ஹூண்டாய் நிறுவனமும், கார்களின் ரகத்திற்கேற்ப, ரூ.2,889 முதல், ரூ.82,906 வரை விலை உயர்வை மேற்கொள்வதாகவும், மார்ச் 1 ம் தேதியில் இருந்து, இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்