ஆப்நகரம்

கலக்கத்தில் ரியல் எஸ்டேட் துறை... வீடு விற்பனை சரிவு!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் துறையினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 16 Jul 2020, 9:39 pm
கொரோனா பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த ரியல் எஸ்டேட் துறை மேலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்டது முதலே இத்துறை நிதி நெருக்கடியாலும் வருவாய் இழப்பாலும் தவித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் கொரோனா பாதிப்பால் வீடு விற்பனையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களிடையே தேவை குறைவு காரணமாக, இந்த ஆண்டின் ஜனவரி - ஜூன் மாதங்களில் வீடு விற்பனை 54 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
Samayam Tamil housing sales


டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் வீடு விற்பனை முந்தைய பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக நைட் ஃபிராங்க் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி - ஜூன் மாதங்களில் மொத்தம் 59,538 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் மொத்தம் 2,45,861 வீடுகள் விற்பனையாகியிருந்தன. இது 54 சதவீத வீழ்ச்சியாகும்.

அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இதில் இந்தியாதான் டாப்!

விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 4,46,787 ஆக உள்ளது. சென்ற ஆண்டின் ஜனவரி - ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை 4,45,836 ஆக இருந்தது. வீடு விற்பனை குறைந்தது மட்டுமல்லாமல் அலுவலகங்களின் பயன்பாடும் கொரோனா ஊரடங்கால் குறைந்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க அனுமதித்துள்ளதால் பெரும்பாலான அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன. குறிப்பாக, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அலுவலகங்களுக்கான தேவை குறைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்