ஆப்நகரம்

வீடு விற்பனை மீண்டும் உயர்வு! கொரோனாவுக்கு குட்-பை!

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வீடு விற்பனை 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 25 Mar 2021, 6:17 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய ரியல் எஸ்டேட் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சொத்து விற்பனை முடங்கியது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் வீடு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. ஸ்டாம்ப் வரி குறைப்பு, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், வீடு வாங்குவோருக்கு சலுகை போன்ற காரணங்களால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஏழு முன்னணி நகரங்களில் வீடு விற்பனை 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் பிராபர்டி தெரிவித்துள்ளது.
Samayam Tamil house


2021ஆம் ஆண்டின் ஜனவரி - மார்ச் காலத்தில் இந்தியாவின் ஏழு முன்னணி நகரங்களில் மொத்தம் 58,290 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டின் இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 45,200 மட்டுமே. கொரோனா பாதிப்புகள் குறைந்து நிதி நெருக்கடி இயல்பு நிலைக்கு வந்துள்ளதால்தான் வீடு விற்பனையும் வளர்ச்சி கண்டுள்ளதாக அனராக் பிராபர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காலாண்டில் விற்பனையான மொத்த வீடுகளில் மும்பை மெட்ரோ, தேசியத் தலைநகர் பகுதி (டெல்லி), பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டும் 83 சதவீத வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் கார்டு வாங்கணுமா? இதெல்லாம் கண்டிப்பா வேணும்!!

ஹைதராபாத் நகரத்தில்தான் வீடு விற்பனையில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2020 முதல் காலாண்டில் அங்கு 2,680 வீடுகள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 4,400 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 64 சதவீத வளர்ச்சியாகும். மும்பையில் 20,350 வீடுகளும், டெல்லியில் 8,790 வீடுகளும், பெங்களூருவில் 8,670 வீடுகளும், புனேவில் 10,550 வீடுகளும், கொல்கத்தாவில் 2,680 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 30 சதவீத வளர்ச்சியுடன் 2,850 வீடுகள் விற்பனையாகியுள்ளன. 2020 முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 2,190 ஆக இருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்