ஆப்நகரம்

வீடு விற்பனை உயர்வு! குஷியில் ரியல் எஸ்டேட் துறை!

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீடு விற்பனை 50 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 26 Oct 2021, 4:58 pm
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் சட்டம் போன்றவற்றால் சிக்கித் தவித்த ரியல் எஸ்டேட் துறை 2020ஆம் ஆண்டில்தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. அதற்குள் கொரோனா வந்து ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியைக் கெடுத்தது. ஆனால் தற்போது அத்துறையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. வீடு விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. லியாசஸ் ஃபோராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்ற ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முதல் அடுக்கு நகரங்களில் மொத்தம் 66,548 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil housing sales


இந்தியாவின் டாப் 8 நகரங்கள் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்தம் 57,903 வீடுகளை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், அடுத்த காலாண்டில் 17 சதவீதம் கூடுதலான வீடுகளை விற்பனை செய்துள்ளன. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பாக தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டதால்தான் வீடு விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிரடியாகக் குறைக்கப்பட்டதால் வீடு விற்பனையில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

அம்பானியின் வெற்றிக் கதை... ஏழைக் குடும்பத்தில் பிறந்த கோடீஸ்வரர்!
ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விலை கொண்டு வீடுகளுக்கான விற்பனை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டின் இதே காலத்தில் இப்பிரிவில் 32 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டிருந்தது. ஆனால் ரூ.50 லட்சத்துக்குக் குறைவான விலை கொண்ட வீடுகளுக்கான பிரிவில் 43 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வீடு விற்பனையில் பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத், சென்னை உள்ளிட்ட நகரங்கள் அதிரடியான வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.

பெங்களூருவில் 99 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புனேவில் 69 சதவீதமும், ஹைதராபாத்தில் 62 சதவீதமும், அகமதாபாத்தில் 58 சதவீதமும், சென்னையில் 57 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்