ஆப்நகரம்

Mutual Funds: ரூ.2 கோடி ஈசியா சம்பாதிப்பது எப்படி?

உங்களது ஓய்வு காலத்தில் 2 கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்கும் வகையில் என்னென்ன மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்...

Samayam Tamil 7 Sep 2020, 4:39 pm
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டமாகும். பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி அந்த நிதியானது பங்குகள், பத்திரங்கள், குறுகிய கால சந்தைப் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீட்டு வர்த்தகத்தில் கைதேர்ந்த ஒரு நிதி நிர்வாக அமைப்பை மியூச்சுவல் ஃபண்ட் கொண்டிருக்கும். பெரும் எண்ணிக்கையிலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்று திரட்டி மியூச்சுவல் ஃபண்ட் உருவாக்கப்படுகிறது. பொதுவான முதலீட்டு நோக்கத்தைக் கொண்ட முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டும் ஒரு அமைப்பாக இது இருக்கும்.
Samayam Tamil investment


உங்களுக்கு இப்போது 37 வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம். உங்களது ஓய்வு காலத்தில் அதாவது 60ஆவது வயதில் ரூ.2 கோடி வரையில் சம்பாதிக்க சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் முதலீடு செய்ய முடிந்தால் உங்களால் மிக எளிதாக அந்த இலக்கை அடைய முடியும். புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு எஸ்.பி.ஐ. முதலீடு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வருமான வரி செலுத்த இதெல்லாம் கண்டிப்பா வேணும்!

15 முதல் 23 ஆண்டுகள் வரையில் உங்களால் தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் ரூ.2 கோடி லாபம் என்பது சுலபமான ஒன்றுதான். உங்களுக்கு 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையில் லாபம் கிடைத்தாலே இந்த இலக்கை அடைய முடியும். எனவே, ஆக்சிஸ் புளூசிப் மியூச்சுவல் ஃபண்ட் (30%), டிஎஸ்பி மிட்கேஎப் ஃபண்ட் (25%), கனரா ரெபெகோ ஈக்விட்டி டைவெர்சிஃபைடு ஃபண்ட் (25%), எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் (20%) போன்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலமாக நீங்கள் உங்களது ஓய்வுக் காலத்தில் 2 கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்த லாபம் தரும் என்று சந்தை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்