ஆப்நகரம்

பிஎம் கிசான் திட்டம்.. ஒரு வீட்டில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும்?

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஒரு வீட்டில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 2 May 2023, 4:05 pm
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி ரீதியாக உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.
Samayam Tamil pm kisan


பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 13 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் 14ஆவது தவணைப் பணம் எப்போது விடுவிக்கப்படும் என்று பயனாளிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் பணம் வரும் தேதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த மே மாதத்திலேயே 14ஆவது தவணைப் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கும் நிதியுதவி பெறுவதற்கும் விவசாயிகளுக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். விவசாயியின் குடும்பங்களும் இதில் பயன்பெறலாம். ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் குழைந்தைகள் அடங்கியது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் குடும்பத்தினர் அனைவரும் பயன்பெறலாம் என்ற சலுகையை வழங்கியுள்ளது.

ஆனால் விண்ணப்பிக்கும் தகுதி கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே உண்டு. இருவருமே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து ஆளுக்கு 6000 ரூபாய் நிதியுதவி பெற முடியாது. இந்த 6000 ரூபாய் என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய முழுக் குடும்பத்துக்கும் சேர்த்து வழங்கப்படுவதாகும். இதில் மனைவிக்கு தனியாக நிதியுதவி கிடைக்காது. சில குடும்பங்களில் கணவன் இல்லாமல் மனைவியே குடும்பத் தலைவராக இருப்பார்கள். அவர்கள் இத்திட்டத்தில் நிதியுதவி பெறலாம்.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு நில விவரங்களுடன் வங்கிக் கணக்கு, மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டு முக்கியம். ஆதார் இணைப்பு இல்லாவிட்டால் பணம் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்