ஆப்நகரம்

ரயில் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருக்கலாம்? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!

இது தெரியாம ரயிலில் போகாதீங்க..!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 15 May 2023, 11:02 am
பயணிகள் இவ்வளவு நேரம் மட்டுமே ரயில் நிலையத்தில் இருக்க முடியும். அதைத் தாண்டினால் அபராதம் செலுத்த வேண்டும்.
Samayam Tamil how much time rail passengers can wait at the railway station everything has a limit
ரயில் நிலையத்தில் எவ்வளவு நேரம் இருக்கலாம்? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!


ரயில் பயணம்!

ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். ரயில் பயணம் என்பது சௌகரியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதால் அதை நிறையப் பேர் விரும்புகின்றனர். மிக முக்கியமாக, ரயில்களில் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு. நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

விதிமுறை முக்கியம்!

ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்னர் ரயில்வே தொடர்பான முக்கியமான விதிமுறைகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். சில விதிமுறைகள் பயணிகளுக்கு சலுகை வழங்குவதாக இருக்கும். ஆனால் சில விதிமுறைகள் பயணிகளுக்கு நெருக்கடியைத் தருவதாகவும் இருக்கின்றன.

பிளாட்பாரம் விதிமுறை!

ரயில்வே பிளாட்பாரத்தில் ரயிலுக்காகக் காத்திருப்பது தொடர்பாக ஒரு விதிமுறை இருக்கிறது. அதைப் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படலாம். இதைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. இதன் காரணமாக அவர்கள் அதிகளவில் அபராதம் செலுத்த நேரிடலாம்.

காத்திருக்க அவகாசம்!

ரயிலில் பயணிக்கும் நேரத்துக்கு முன்பே மக்கள் ரயில் நிலையத்தை அடைகிறார்கள். ஆனால் டிக்கெட் எடுத்த பிறகும், நடைமேடையில் காத்திருப்பதற்கு நேர வரம்பு உள்ளது. அதைப் பின்பற்றாமல் இருந்தால், கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே ரயில்வேயின் இந்த விதியைப் பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

​எவ்வளவு நேரம் இருக்கலாம்?

ரயில் டிக்கெட் எடுத்து ரயில் நிலையத்தை அடைந்தவுடன் அங்கு தங்குவதற்கு தனி விதிமுறைகள் உள்ளன. உங்கள் ரயில் பகலில் புறப்படுவதாக இருந்தால், ரயில் நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக நீங்கள் நிலையத்தை அடையலாம். உங்கள் ரயில் இரவு நேரத்தில் புறப்படுவதாக இருந்தால், ரயில் நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக நீங்கள் நிலையத்தை அடையலாம். இதற்கு உங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.

​இறங்கும் போது..!​

அதே சமயம், பயணம் முடிந்து ரயிலில் இருந்து இறங்கிய பிறகு பகலில் இறங்கும்போது, ஸ்டேஷனில் 2 மணி நேரம் தங்கலாம். இரவில் 6 மணி நேரம் வரை இதே விதி பொருந்தும். இருப்பினும், இதற்காக நீங்கள் டிக்கெட்டைகையில் வைத்திருக்க வேண்டும் டிக்கெட் பரிசோதகர் அதைக் கேட்டால் கண்டிப்பாகக் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்.

​பிளாட்பாரம் டிக்கெட்!

குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ரயில் நிலையத்தில் தங்கினால், நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும். அதாவது, பகலில் ரயில் நேரத்திலிருந்து 2 மணி நேரத்திற்கும், இரவில் ரயில் நேரத்திலிருந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு ஸ்டேஷனில் தங்கினால், நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் உங்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல, பிளாட்பாரம் டிக்கெட்டின் செல்லுபடியாகும் காலம் 2 மணிநேரம் மட்டுமே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்