ஆப்நகரம்

ஏடிஎம் கார்டை பிளாக் பண்ணுவது எப்படி?

உங்களது ஏடிஎம் கார்டு தொலைந்துபோனாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ அதில் பண மோசடி செய்யப்படாமல் இருக்க உடனே இதைப் பண்ணுங்க...

Samayam Tamil 4 Dec 2020, 12:26 pm
வங்கித் துறையில் என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் ஏடிஎம் கொள்ளைகளும் பண மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நமது ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ உடனே அதிலிருந்து பணம் திருடுபோவதைத் தடுப்பது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். உடனடியாக அந்த ஏடிஎம் கார்டை பிளாக் செய்யாவிட்டால் அதில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஆன்லைன் மூலமாகவே மிகச் சுலபமாக பிளாக் செய்ய முடியும்.
Samayam Tamil atm


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் கார்டை பிளாக் செய்வது எப்படி?

>> எஸ்பிஐ ஆன்லைன் தளத்தில் சென்று உங்களது நெட்பேங்கிங் யூசர் நேம் மற்றும் பாஸ்வார்டு கொடுத்து உள்நுழைய வேண்டும்.

>> உள்நுழைந்தவுடன் ‘e-Services’ என்ற பிரிவின் கீழ் ‘ATM Card Services’ என்ற வசதியில் கிளிக் செய்து ‘Block ATM Card’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

>> உங்களது கணக்குடன் தொடர்புடைய ஏடிஎம் கார்டு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.

>> உங்களது கணக்கில் செயல்பாட்டில் இருக்கும் அனைத்து ஆக்டிவ், இன் ஆக்டிவ் கார்டு விவரங்களும் உங்களுக்குக் காட்டும்.

>> கார்டுகளின் முதல் நான்கு எண்களும் கடைசி நான்கு எண்களும் காண்பிக்கப்படும். அதில் பிளாக் செய்ய வேண்டிய கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.

>> தேவையான கார்டைத் தேர்ந்தெடுத்து ‘Submit’ கொடுத்தால் உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.

>> ஓடிபி எண்ணைப் பதிவிட்டு ‘Confirm’ கொடுக்க வேண்டும். இதன் பின்னர் உங்களது ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டு விடும். நீங்கள் பிறகு புதிய கார்டுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்