ஆப்நகரம்

IRCTC: இலவசமாகவே டிக்கெட் புக் பண்ணலாம்... எப்படி?

ரிவார்டு பாயிண்ட் மூலமாக ஐஆர்சிடிசி தளத்தில் இலவமாகவே டிக்கெட் புக் பண்ணுவது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 30 Oct 2020, 2:31 pm
ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு மூலமாக வெகுமதி புள்ளிகளை (ரிவார்டு பாயிண்ட்ஸ்) பயன்படுத்தி இலவச ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டின் மூலம் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்களுக்கான வெகுமதிப் புள்ளிகளை வைத்து இலவசமாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாகவே இச்சலுகையை நீங்கள் பெற முடியும். 5676791 என்ற எண்ணுக்கு TRAIN என்று டைப் செய்து உங்களது மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பினாலே போதும்.
Samayam Tamil sbi irctc


இதன் அம்சங்கள் என்னென்ன?

>> 2021 மார்ச் 31 வரை இத்திட்டத்தில் சேர கட்டணம் இல்லை.

>> Irctc.co.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு வெகுமதி புள்ளிகளாக 10 சதவீதம் வரை திரும்பக் கிடைக்கும்.

>> ஒரு ரூபாய்க்கு ஒரு வெகுமதிப் புள்ளி என்ற அளவில் வெகுமதி கிடைக்கிறது.

>> இந்த வெகுமதிப் புள்ளிகளை வைத்து உங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இலவச ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும்.

>> முதல் 45 நாட்களில் ரூ.500 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு 350 போனஸ் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும்.

>> Irctc.co.in மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஒரு சதவீதம் பரிவர்த்தனை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

>> அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இந்த கார்டு மூலம் எரிபொருள் நிரப்பினால் ஒரு சதவீத எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி.

>> சுங்கச் சாவடிகள், மெட்ரோ, ஃபிளாட்பார்ம் டிக்கெட்கள் போன்றவற்றில் tap and go வசதி விரைவில் நடைமுறைக்கு வரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்