ஆப்நகரம்

சமையல் சிலிண்டர் மானியம் எவ்வளவு வருது?

ஆன்லைன்லேயே செக் பண்ணலாம்!

Curated byசெந்தில் குமார் | Samayam Tamil 25 Aug 2021, 4:20 pm
சமையல் சிலிண்டருக்கான அரசின் மானிய உதவி சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
Samayam Tamil how to check lpg cylinder subsidy status online
சமையல் சிலிண்டர் மானியம் எவ்வளவு வருது?



சிலிண்டருக்கு மானியம்!

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான (LPG) மானியம் அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். முதன்முதலில் சிலிண்டர் வாங்கும்போது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், மானியம் பெற முடியாது.

கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும்போது அந்த மானியத் தொகை வாடிக்கையாளர்களுக்கு வருகிறதா இல்லையா என்பது பலருக்கு சந்தேகமாக இருக்கும். அது தெரியாவிட்டால் கண்டுபிடிக்க மிகவும் எளிமையான வழி உள்ளது. ஆன்லைன் மூலமாகவே அதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மானியத் தொகை எந்தக் கணக்கிலிருந்து மாற்றப்படுகிறது என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

ஆன்லைனில் பார்க்கலாம்!

Mylpg.in என்ற ஆன்லைன் தளத்தில் செல்ல வேண்டும். வெப்சைட்டின் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படமும் இருக்கும். அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும். உடனே புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதிலுள்ள பார் மெனுவுக்குச் சென்று ’Give your feedback online’என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ கொடுக்க வேண்டும்.

உங்கள் வங்கி விவரங்கள் புதிய துணைப்பக்கத்தில் வெளியாகும். மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா, இல்லையா என்பதை அதில் நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை மானியம் உங்களுக்குக் கிடைக்காவிட்டால் 18002333555 என்ற டோல் ஃப்ரீ நம்பருக்கும் அழைத்து புகாரளிக்கலாம்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்