ஆப்நகரம்

பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? செக் பண்றது ஈசி!

உங்களுடைய ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை செக் பண்றது எப்படி? ஈசி வழி இதோ...

Samayam Tamil 31 Mar 2021, 12:41 pm
ஆதார் கார்டு உள்ள அனைவரும் அவர்களது பான் கார்டையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் மட்டுமே உள்ளது. காலக்கெடு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் இணைத்து வருகின்றனர். ஆனால், பலருக்கு அவர்களது ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே தெரியாமல் இருக்கும். அதை அவர்களே மிக எளிதாக ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும்.
Samayam Tamil aadhaar pan link


https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற லிங்க்கை ஓப்பன் செய்யவும்.

அதில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்களைப் பதிவிட வேண்டும்.

பதிவிட்ட பின்னர் view Link Aadhaar status என்பதை கிளிக் செய்தால் உங்களது பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

ஆதாரையும் பான் கார்டையும் எஸ்.எம்.எஸ். மூலமாகவே மிக எளிதாக இணைக்கலாம்.

567638 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலம் இணைக்கலாம். வாடிக்கையாளர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட தனது மொபைல் எண்ணிலிருந்து UIDPAN என டைப் செய்து ஒரு இடைவெளி (space) விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து மேற்கூறிய நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்