ஆப்நகரம்

உங்களுக்கு பணம் வருமா வராதா? தெரிஞ்சிக்க இதை செய்யுங்க!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உங்களுக்கு பணம் வருமா என்பதை சரிபார்க்க என்ன செய்யவேண்டும்?

Samayam Tamil 8 Nov 2020, 5:52 pm

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தவணை முறையில் 6000 ரூபாயை மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த பணம் உதவுகிறது.
Samayam Tamil Money


தள்ளுபடி விலையில் தங்கத்தை அள்ளிட்டு போக சூப்பர் ஐடியா!

இதன்படி, மத்திய அரசு ஏழாம் தவணையாக 2000 ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கப்போகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் பதிவு செய்திருந்தால், பயனாளிகளின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்துவிடுங்கள். வீட்டில் இருந்தபடியே நீங்கள் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

1. முதலில் பிரதமர் கிசான் இணையதளத்துக்கு போக வேண்டும்.

2. அதில் menu barல் 'Farmers corner' ஆப்ஷனுக்கு போக வேண்டும்.

3. அதில் Beneficiary list ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

4. அதில் உங்களது மாநிலம், மாவட்டம், தொகுதி, கிராமம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்ய வேண்டும்.

5. இவற்றை பூர்த்தி செய்தபிறகு Get Report ஆப்ஷனை கிளிக் செய்தால் முழு பட்டியலும் கிடைக்கும். இதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்துவிடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்