ஆப்நகரம்

உங்க ஆதார் கார்டு உண்மையா, போலியா? கண்டுபிடிப்பது ஈசி!

ஒருவருடைய ஆதார் கார்டு ஒரிஜினலா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கான வழி...

Samayam Tamil 1 Dec 2021, 5:27 pm
இந்திய அரசாங்கத்தால் 12 இலக்க எண்களைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக வழங்கப்பட்டதுதான் ஆதார். இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்களது கைரேகை, கண் அடையாளம் ஆகியவற்றைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டு அடையாளமாக்கப்பட்டது.
Samayam Tamil aadhaar


தற்போது ஆதார் கார்டுகள் பெரும்பாலும், வங்கிகள், முகவரிச் சான்று ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைரேகை மற்றும் உருவ அடையாளங்களை வைத்து பிடிப்பதற்கும் ஆதார் பெரிதும் உதவுகிறது.

இடம் வாங்க, வீடு வாங்க, வங்கி லோன் பெற போன்ற அனைத்திற்கும் உதவுகிறது. தற்போது வங்கிகளில் நாம் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமெனில் வீட்டில் இருந்தவாறே நம்மால் தொடங்கமுடியும். அதற்கும் பெரும் உதவி புரிவது ஆதார் தான். ஆதாருடன் நாம் உபயோகப்படுத்தும் தொலைபேசி எண்ணை இணைத்துவிட்டால், இ-கேஒய்சி (ekyc)செய்யலாம். அதன்மூலம் நாம் உடனடி வங்கி கணக்கைத் தொடங்க முடியும்.

ஆதார் கார்டுகள், நம்முடைய கை, கண், புகைப்படம், தொலைபேசி ஆகிய தகவல்களை பெற்று தனித்தனி அடையாளமாய் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட 12 இலக்க எண்களில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. வேண்டுமென்றால் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய முடியும்.

அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டு போலியானதா அல்லது உண்மையானதா என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது? அதற்கு ஈசி வழி உள்ளது...

ஆதார் அமைப்பின் uidai.gov.in என்ற முகவரியில் செல்ல வேண்டும்.

- அதில் ‘Aadhaar Services’என்பதை டிராப் டவுன் மெனுவில் தேர்ந்தெடுக்கவும்.

- அடுத்ததாக, ‘Aadhaar Verification’ என்பதை கிளிக் செய்து, உங்களுடைய ஆதார் எண்ணைப் பதிவிடவும்.

கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு ‘Submit’ கொடுக்கவும்.

- இப்போது வரும் புதிய பக்கத்தில் உங்களுடைய ஆதார் தொடர்பான விவரங்கள் வரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்