ஆப்நகரம்

வீட்டு வசதித் திட்டத்தில் மானியம்.. லிஸ்ட்ல உங்க பெயர் இருக்கா?

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்களது பெயர் பட்டியலை சரிபார்ப்பது எப்படி?

Samayam Tamil 6 Oct 2022, 4:24 pm
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வீடு கட்ட கடன் மானியம் வழங்கப்படுகிறது. நிறையப் பேர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற்றுள்ளனர். ஆனால் நிறையப் பேருக்கு இன்னும் உதவிகள் வந்துசேரவில்லை. ஒருவேளை நீங்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்து, 2022-2023ஆம் ஆண்டிற்கான புதிய பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க விரும்பினால் அது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Samayam Tamil awas yojana


நீங்களும் PM Awas Yojana திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தால், ஆன்லைன் விண்ணப்ப நிலையை சரிபார்க்கலாம்.

1. முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. அதில் 'சிட்டிசன் அசெஸ்மென்ட்' என்ற விருப்பம் இருக்கும். இதை கிளிக் செய்யவும்.
3. ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் 'உங்கள் மதிப்பீட்டு நிலையைக் கண்காணிக்கவும்' என்பதை கிளிக் செய்யவும்.
4. இதற்குப் பிறகு, பதிவு எண்ணை நிரப்பி, மாநிலத்தை சரிபார்க்க கேட்கப்பட்ட தகவலைக் கொடுக்க வேண்டும்.
4. கடைசியாக மாநிலம், மாவட்டம் மற்றும் நகரம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும். இப்போது உங்கள் விண்ணப்பத்தின் நிலை உங்கள் திரையில் காட்டப்படும்.

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!!

யாருக்கு உதவி கிடைக்கும்?

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், மூன்று லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள், வீடு இல்லாதவர்கள் பயன்பெறலாம். இதற்காக, 2.50 லட்சம் ரூபாய் மானிய உதவி வழங்கப்படுகிறது. மூன்று தவணைகளில் இந்தத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக 50,000. இரண்டாவது தவணையாக 1.50 லட்சம். அதே சமயம் மூன்றாம் தவணையாக 50,000 வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்