ஆப்நகரம்

எக்ஸ்ட்ரா வருமானம் வேணுமா? அப்போ இதை முதல்ல பண்ணுங்க!

பண நெருக்கடி காலத்தை சமாளித்து கூடுதல் வருமானம் பெற என்ன செய்யலாம்?

Samayam Tamil 12 Feb 2021, 4:10 pm
கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தால் ஏராளமானோர் பண நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயல்பாடுகளும் மந்தமடைந்துள்ளன. மேலும், பலரும் வேலைவாய்ப்புகளை இழந்து, தொழிலில் நஷ்டம் அடைந்துள்ளனர். தற்போது நிலைமை படிப்படியாக முன்னேறி வரும் சூழலில், நெருக்கடியை சமாளிக்கவும், ஸ்மார்ட்டாக பணத்தை சேமிக்கவும் சில வழிகளை பார்க்கலாம்.
Samayam Tamil how to deal with cash crisis and generate extra income
எக்ஸ்ட்ரா வருமானம் வேணுமா? அப்போ இதை முதல்ல பண்ணுங்க!


முதல் டார்கெட் இதுதான்

செலவுகளையும், சேமிப்பையும் சரியாக கையாண்டுவிட்டாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். எனினும், பலருக்கு இது ஈசியானதல்ல. சம்பளம் வந்தவுடன் ஷாப்பிங் செய்து தீர்த்துவிடாமல், சேமிப்பு, எமர்ஜென்சி நிதி என பணத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு பகுதியை எடுத்து சிறு சிறு முதலீடுகளில் போடலாம். சுருக்கமாக சொன்னால், குறைவாக செலவு செய்து நிறைய சேமிக்க வேண்டும்.

​நீண்டகால முதலீடுகள்

கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை மிக மோசமாக அடி வாங்கியுள்ளது. ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் வீடு வாங்க ஆளே இல்லாத நிலை உருவானது. தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் படிப்படியாக மீண்டு வருகிறது. எனவே, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவையும் சில நல்ல நீண்ட கால முதலீடுகளாகும்.

​மாற்று வருமான வழிகள்

திடீரென வேலையை இழந்துவிட்டால் உங்களது பொழுதுபோக்கு மற்றும் விருப்பமான பணிகளை வைத்து எக்ஸ்ட்ரா வருமானம் ஈட்ட வழிவகை செய்யலாம். போட்டோகிராபி, சமையல், யூட்யூப் சேனல் என கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

​கடன்களை தவிர்க்க வேண்டும்

நிதி நெருக்கடி காலகட்டத்தில் ஷாப்பிங் செய்து பணத்தை வீணடிப்பது புத்திசாலித்தனமில்லை. இதிலும் சிலர் கடன் வாங்கி ஷாப்பிங் செய்வார்கள். இது மிக மோசமான முடிவுகளில் தள்ளிவிடக்கூடும். பண நெருக்கடி காலங்களில் கடன்களை முற்றிலுமாக தவிர்த்து பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்