ஆப்நகரம்

​இரு மடங்கு லாபம் சம்பாதிக்க சூப்பர் வழி!

கனரா வங்கியின் சிறப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் முதலீட்டுப் பணத்தில் இரு மடங்கு லாபம் ஈட்டலாம்.

Samayam Tamil 28 Mar 2021, 8:33 pm
அனைவருமே சிறிய தொகையை முதலீடு செய்து பெரிய தொகையை ஈட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். அது சாதாரண விஷயமல்ல. சரியான இடத்தில் சரியான திட்டத்தில் தொடர்ச்சியாக முதலீடு செய்து வந்தால் அந்த இலக்கை எளிதாக அடைந்துவிடலாம். எஸ்.ஐ.பி. முதலீட்டில் சிறிய தொகையைக் கொண்டு பெரிய லாபத்தை ஈட்ட முடியும். கனரா வங்கியின் ரோபெகோ ஸ்மல் கேப் ஃபண்ட் திட்டத்தில் ஒரு வருடத்தில் இரு மடங்கு லாபம் கிடைக்கிறது.
Samayam Tamil sip


கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளனர். ஒரு வருட சேமிப்பில் 105 சதவீத லாபமும், ஆறு மாத சேமிப்பில் 34 சதவீத லாபமும், மூன்று மாத சேமிப்பில் 15 சதவீத லாபமும் கிடைத்துள்ளது. மூன்று மாத சேமிப்புத் திட்டத்தில் ஒருவர் ரூ.10,000 முதலீடு செய்தால் அவருக்கு ரூ.11,467 கிடைக்கிறது. அதேபோல, ஆறு மாதத்தில் ரூ.13,427 மற்றும் ஒரு வருடத்தில் ரூ.20,514 கிடைக்கிறது.

ஏப்ரல் 1 முதல் பேங்க் எஸ்.எம்.எஸ். வராதா? காரணம் என்ன?
ஒரு வார முதலீட்டில் ரூ.9,895.60 மட்டுமே கிடைத்து. இது 1.04 சதவீத நஷ்டம்தான். அதேபோல, இரண்டு வருட முதலீட்டில் மொத்தம் ரூ.14,804.70 மட்டுமே கிடைத்திருக்கிறது. இதே திட்டத்தில் ஒருவர் ரூ.12,000 முதலீடு செய்தால் அவருக்கு ஒரு வருடத்தில் ரூ.17,328 கிடைக்கும். அதேபோல, ரூ.24,000 முதலீடு செய்தால் இரண்டு வருடத்தில் அவருக்கு ரூ.35,939 கிடைக்கும். இதுபோன்ற திட்டங்களில் அதிக லாபம் கிடைத்தாலும் முதல் முறை முதலீட்டாளர்கள் ஸ்மால் கேப் திட்டங்களில் முதலீடு செய்யும்படி வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்