ஆப்நகரம்

ரேஷன் கார்டு இல்லையா... இலவச உணவு வாங்குவது எப்படி?

இலவச அரிசி, பருப்பு வாங்குவது எப்படி?

Samayam Tamil 21 Aug 2020, 6:19 pm
அரசு வழங்கும் இலவச உணவு தானியங்களை ரேஷன் கார்டு இல்லாதவர்கள் எப்படி வாங்கலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்...
Samayam Tamil how to get free ration food without ration card here is the details
ரேஷன் கார்டு இல்லையா... இலவச உணவு வாங்குவது எப்படி?


கரீப் கல்யாண் யோஜனா!

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பினருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஏழை மக்களுக்கு இலவச ரேஷனின் பயனை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளில் இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் அட்டை இல்லாதவர்கள் என்ன செய்வது?

ஆதார் கார்டு இருந்தாலே போதும்... உங்களிடம் ரேஷன் கார்டு இல்லையென்றால், உங்களது ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு பதிவுச் சீட்டு வழங்கப்படும். இந்தச் சீட்டை ரேஷன் கடையில் காட்டிய பிறகு உங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லாமல் இலவச உணவு தானியங்கள் கிடைக்கும். இதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுகு மத்திய அரசு பொறுப்பு நிர்ணயித்துள்ளது.

திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் விரிவாக்கத்திற்காக ரூ.90,000 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதத்திலேயே இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் கொரோனா பிரச்சினை எழுந்தபோது, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை பிரதான் மந்திரி கரிப் கல்யாண் சிறப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் ஏப்ரல் மாதத்தில் 74.3 கோடி மக்கள் பயனடைந்தனர். மே மாதத்தில் 74.75 கோடிப் பேரும், ஜூன் மாதத்தில் 64.72 கோடிப் பேரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்