ஆப்நகரம்

ஆதார் கார்டு இருந்தாலே போதும்... லட்சங்களில் கடன் வாங்கலாம்!

உங்களுடைய ஆதார் கார்டு மூலமாகவே நீங்கள் வங்கியில் கடன் வாங்க முடியும். அது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...

Samayam Tamil 18 Oct 2021, 3:53 pm
இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியாது. சிம் கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு, பிஎஃப் கணக்கு போன்ற அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயமாகும். அந்த ஆதார் கார்டை வைத்து நீங்கள் லோன் கூட வாங்கலாம்.
Samayam Tamil aadhaar


கொரோனா வந்த பிறகு நிறையப் பேருக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க எங்காவது கடன் வாங்கலாமா என்று நினைப்பார்கள். வங்கிகளுக்குச் சென்று கடன் வாங்குவதை விட இப்போது மொபைல் ஆப் மூலமாக அதிகப் பேர் கடன் வாங்குகின்றனர். இதற்கு உடனடியாக ஒப்புதல் கிடைத்துவிடுகிறது. அதேபோல, கடன் தொகையும் உடனடியாக விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடுகிறது.

எந்த வங்கியில் கடன் வாங்க நினைக்கிறீர்களோ அந்த வங்கியின் மொபைல் ஆப்பிலேயே உடனடிக் கடன் வாங்கும் வசதி உள்ளது. அந்த ஆப்பில் சென்று தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு உங்களுடைய அடையாள ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும். ஆதார் கார்டு காப்பியை அப்லோடு செய்ய வேண்டும். வேலை பார்க்கும் விவரம் போன்ற தகவல்களைப் பதிவிட வேண்டும். உங்களது ஆவணங்கள் வங்கி தரப்பிலிருந்து சரிபார்க்கப்பட்டு உங்களுக்குத் தகுதியான தொகை உடனடியாக டெபாசிட் செய்யப்பட்டுவிடும்.

தீபாவளிக்கு மூன்று போனஸ்.. அரசு ஊழியர்கள் ஹேப்பி!
இந்த வகையில் கடன் பெறுவதற்கு 23 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதேபோல ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். உங்களது கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் கடன் கிடைக்கும். ஆதார் கார்டு இருந்தாலே போதும். மற்ற ஆவணங்கள் தேவைப்படாது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்