ஆப்நகரம்

சமையல் சிலிண்டருக்கு ரூ.50 லட்சம்! யாருக்கு, எப்படி கிடைக்கும்?

நபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம்!

Samayam Tamil 14 Apr 2021, 3:32 pm
சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ரூ.50 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. எதற்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது, அதை எப்படிப் பெறுவது என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil how to get insurance cover of rs 50 lakh for lpg cylinder
சமையல் சிலிண்டருக்கு ரூ.50 லட்சம்! யாருக்கு, எப்படி கிடைக்கும்?


சமையல் சிலிண்டர்!

சமையல் சிலிண்டர் இல்லாத வீடே இல்லை என்று கூறும் அளவுக்கு, ஏழை எளிய மக்களின் வீடுகளில் கூட இப்போது சமையல் எரிவாயு பயன்பாடு வந்துவிட்டது. அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு பயன்பாடு பரவலாக உள்ளது. சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோர் அதிலுள்ள சலுகைகளையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். சமையல் சிலிண்டருக்கு விபத்துக் காப்பீடு போன்ற பல சலுகைகள் இருக்கின்றன.

ரூ.50 லட்சம் காப்பீடு!

சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. பலருக்கு இதுகுறித்துத் தெரிவதில்லை. சிலிண்டரில் கேஸ் லீக்கேஸ் மற்றும் சிலிண்டர் வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு கிடைக்கிறது. இதற்காக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐசிஐசிஐ லம்பார்டு உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

விதிமுறைகள்!

சமையல் சிலிண்டர் விபத்தில் சிக்கிய நபருக்கு ரூ.50 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும். இந்த விபத்தில் எத்தனை பேர் சிக்கினார்களோ அத்தனை பேருக்கும் அதிகபட்சம் தலா ரூ.10 லட்சம் கிடைக்கும். சிலிண்டருக்கான விபத்துக் காப்பீடு பெறுவதற்கு, விபத்து நடந்தவுடன் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் சிலிண்டர் விநியோகஸ்தருக்கு உடனடியாகப் புகாரளிக்க வேண்டும். இந்த காப்பீட்டு உதவியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. விபத்தில் சிக்கி இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், முதல் தகவல் அறிக்கை மற்றும் உடற்கூறு சோதனை போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்