ஆப்நகரம்

போஸ்ட் ஆபீசில் கொட்டிக் கிடக்கும் பணம்.. ரூ.35 லட்சம் உங்களுக்கே!

இந்தத் திட்டத்தின் கீழ் 1400 ரூபாய் மாத முதலீட்டில் 35 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

Samayam Tamil 12 May 2022, 4:02 pm
பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நிறைய சேமிப்பு திட்டங்களை தபால் துறை செயல்படுத்தி வருகிறது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் அதிக லாபம் கிடைப்பதோடு அங்கே சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும். அரசின் உத்தரவாதமும் இருக்கிறது.
Samayam Tamil post office


தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் நிறைய உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்று கிராம் சுரக்‌ஷா யோஜனா. இத்திட்டம் குறைந்த முதலீட்டில் அதிக ரிட்டன் தருகிறது. ஒவ்வொரு மாதமும் 1411 ரூபாய் செலுத்தினாலே முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் சம்பாதிக்கலாம்.

19 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம். ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்த வேண்டும். காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அளவிலும் பிரீமியம் செலுத்தலாம்.

சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்!
19 வயதுடைய ஒருவர் இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் அவரது 55 வயதில் ரூ.31.60 லட்சம் கிடைக்கும். இதற்கு அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பிரீமியம் செலுத்த வேண்டும். அதேபோல, 58 வயது வரை முதலீடு செய்வதாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.1463 ரூபாயும், 60 வயது வரை 1411 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தில் கடன் வாங்கும் வசதியும் உள்ளது. நான்கு ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு இந்த வசதியைப் பெறலாம். பிரீமியம் செலுத்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்